Saturday, 30 October 2010

நட்பு

1% - கோபம்
10% - திமிர்
20%-விளையாட்டு
30%- பிரியம்
40%-பாசம்
50%- லவ்
60%-ஆசை
70%- அன்பு
80%- உரிமை
90%- அக்கரை
100%- நட்பு....இது என்னுடைய நட்பு காலை வணக்கம்

Friday, 8 October 2010

ஜோக்ஸ்

''தலைவர் வடிவேலு ரசிகரா?''
''ஏன் கேட்கிறே?''
கட்சி ஆபீஸூக்குள்ள வந்ததுமே ஆபிஸ் பாய்கிட்ட' தம்பி பீர் இன்னும் வரலை'ங்கறாரே?


'' பிச்சைக்காரனையெல்லாம் ஆபரேஷன் தியேட்டருக்கு உள்ளே விட்டது யார்?''
''டாக்டர், அவர் பிச்சைக்காரன் இல்லை... பேஷன்ட்தான். உயிர்ப் பிச்சை கேட்குறாரு!''




''7-வது வீட்ல ராகு பார்ப்பதால், உங்க பொண்ணுக்கு நல்ல யோகம்!''
''அப்பா, ஜோசியர் தப்பா சொல்றார். அவரு பேரு ராகு இல்ல...ரகு!''




''உன்னைக் கட்டிக்கிட்டதுக்குப் பதிலா, ஒரு கழுதையைக் கட்டியிருக்கலாம்!''
''நல்ல வேளை... நீங்க அப்படிச் செய்யலை. நெருங்கிய சொந்தத்துல பொண்ணு கட்டுறது தப்புங்க!''




''உண்மையைச் சொல்லுடா...இல்லைன்னா, எலும்பை எண்ணிடுவேன்!''
அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷன்ல ஏற்கனவே எண்ணிட்டாங்க. போன் பண்ணிக் கேட்டுக்குங்க சார்!''

கேரட் நெய்ச்சோறு

தேவையானவை; பிரியாணி அரிசி 2 தம்ளர், கேரட் சாறு 4 தம்ளர், பெரிய வெங்காயம் 3, பச்சை மிளகாய் 2, ஏலக்காய், கிராம்பு, நெய், புதினா, உப்பு.
செய்முறை; அரிசியை ஊற வைக்கவும், மிளகாய்- வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். குக்கரில் நெய் விட்டு- கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், மிளகாயை வதக்கவும். பின்னர் அதில் கேரட் சாறை
ஊற்றி - புதினா இலை, உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.
அரிசியை சிறிது நெய்யில் வறுத்து அதில் சேர்த்து, குக்கரை மூடவும். 2 விசில் வந்ததும் இறக்கவும். சத்தான கேரட் நெய்ச்சோறு தயார். எல்லோருக்கும் பிடிக்கும். மதிய சாப்பாட்டுக்கு உகந்தது. 

ராணி இதழ் 3-10-2010.

Thursday, 7 October 2010

கற்கால மனிதன்

'கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழன்' என்று நாம் மார்தட்டி வந்தாலும், மனித இனம் ஆப்பிரிக்காவில் தான் தோன்றி இருக்க
வேண்டும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கற்கள் சம்பந்தப்பட்ட ஆயுதங்களையும், சாதனங்களையும் உபயோகித்து வந்ததால்
'கற்கால மனிதர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள்.
ஆதி மனிதன்; அத்தகைய ஐஸ் யுக காலத்தில் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனின் முன்னோடியான ஆஸ்ட்ரோபிதிகஸ் வாழ்ந்து வந்தனர்.இவர்களில் இரு வகையினர் இருந்தனர்.
ஒரு வகையினர் 4 அடி உயரமும் 45-54 கிலோ கிராம் எடையும் கொண்டிருந்தனர். இவர்களில் மற்றொரு வகையினர் 5 அடி உயரமும் 54-68 கிலோ கிராமும் எடை கொண்டிருந்தனர்.இவர்களில்
சிறிய உருவத்தினர் 20 லட்சம் ஆண்டுகளில் மனிதர்களாக உருவெடுத்ததாக நம்பப்படுகின்றது. பெரிய உருவத்தினர் கொரில்லா குரங்குகளாக உருவெடுத்து தாக்கு பிடிக்கத் தெரியாததால் ஒழிந்து
வரும் இனமாக உள்ளது.
கூட்டு வாழ்க்கை; கற்கால மனிதர்கள் பெரும்பாலும் 25-50 நபர்கள் அடங்கிய தனித்தனி கூட்டங்களாக வாழ்ந்து வந்தனர். அன்றைய காலத்தில் ஒவ்வொரு கண்டத்திலும் சில ஆயிரம் மக்களே
இருந்தனர். இதனால் அன்றைய காலக்கட்டத்தில் தனி மனிதன் ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் 25-50 நபர்களை மட்டுமே நேரில் சந்திக்க நேர்ந்தது.
வேட்டையாடுதல்; வேட்டையாடுதல் ஒன்றே ஆதிமனிதனின் வேலையாக இருந்தது. சிறிய மிருகங்கள் முதல் யானை போன்ற பெரிய மிருகங்களையும் 4-20 கொண்ட குழுவாக சென்று
வேட்டையாடி வந்தனர்.
உணவு முறை; சிங்கம், புலி, கரடி ஆகியவை மற்ற விலங்குகளைச் சண்டைப் போட்டு கொன்று சாப்பிடுவதைக் கண்ட ஆதிமனிதர்கள் வேட்டையாடி பிடித்த சாகடித்த விலங்குகளின் தசைகளை
பச்சையாக சுமார் 5 லட்சம் ஆண்டுகளாக சாப்பிட்டு வந்தனர். காளை, ஆடு, மான், குரங்கு, ஆகியவை சில இலை, காய் கனிகளையும் சாப்பிடுவதைப் பார்த்த மனிதர்கள் அவற்றில் தனக்குப் பிடித்தவற்றை
பறித்து சாப்பிட்டு வந்தனர். ஆறு, குளம், கடல் ஆகியவற்றில் கொக்குகள், மீன்களைப் பிடித்து சாப்பிடுவதைக் கண்ட அவர்கள் மீன்களையும் கைகளால் பிடித்து உண்ணத் துவங்கினர்.
உடைகள்;'ஆடையில்லா மனிதன் அரை மனிதன்!'. அரை மனிதனான கற்கால மனிதன் எப்போது ஆடைகளை அணிந்து மனிதனானான் என்பதற்க்குத் தகுந்த சான்று என்றும், எங்கும் இல்லை.
ஆப்பிரிக்கா, ஆசியா, தென் ஆப்ரிக்கா தட்ப வெப்ப நிலை வெதுவெதுப்பாகவே இருந்ததினால் அவர்களுக்கு உடையைப் பற்றிய உணர்வே எழவில்லை. ஐரோப்பா போன்ற குளிர் பிரதேசங்களை பல காலம் தவிர்த்தே வந்தனர். குளிர்காலங்களில் குளிர் பிரதேசங்களுக்கு உணவை தேடி அவர்கள் பிரவேசம் செய்வது கட்டாயமானபோது உடையின் அவசியத்தை உணர்ந்தனர். ஆடு, மாடுகள் கடுங்குளிரிலும் அலைவதைக் கண்டு, கொன்ற ஆடு, மாடுகளின் தோலை காய வைத்து அப்படியே உடுத்தலானார்கள்.பறவைகள் இறகுகளால் உடலை சூடாக வைத்துக் கொள்வதைக் கண்ட அவர்கள் இலை சருகுகளால் தங்கள் இடுப்பையும் மார்பையும் மூடிக்கொண்டனர்.

உறைவிடங்கள்;பெரும்பாலும் கற்கால மனிதர்கள் ஓரினத்தில் தங்காமல், இரையைத் தேடி நகர்ந்து கொண்டே நாடோடியாக வாழ்ந்த காரணத்தால் வசிக்க வீடு என்பது அவசியம் இல்லாமல் போயிற்று. மாமிசமும் , தாவர உணவும் அதிகம் கிடைத்த இடங்களில் மட்டும் அவை தீரும்வரை தங்கத் தொடங்கினர். மரங்களின் மேல் வாழ்ந்த அவர்கள், மரக்கிளைகளை ஒடித்து இலைகளையும் தோல்களையும் பரப்பி கூடாரம் போல் அமைத்து உள்ளே உறங்கத் தொடங்கினர். இயற்கை சீற்றம் இருந்த போது மட்டும் குகைகளின் உள்ளே ஒதுங்கிக் கொண்டனர். மற்ற நேரங்களில் குகைகள் இருட்டாகவும், ஈரமாகவும் இருந்ததால் அவற்றில் நாட்டம் கொள்ளவில்லை.விவசாயம் செய்ய ஆரம்பித்த பிறகே நிரந்தர வீடுகளை அமைக்களாம். 

கற்கால மனிதன்
;
தெய்வ வழிபாடு;கடவுள் நம்பிக்கை என்பது 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது. இறந்தவர்களை முறையாக புதைக்க துவங்கியது இந்த கால
கட்டத்தில் தான். இறப்புக்குப் பின்னும் வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கை தோன்றலின் பிரதிபலிப்பே அந்த சமாதிகள். அடர்ந்த மழை, புயல், காற்று, இடி, மின்னல், வெள்ளம் ஆகிய இயற்கையின்
சீற்றங்கள் தெய்வங்களின் கோபங்களாக நம்பப்பட்டதால் கூட்டு பிரார்த்தனைகள் பிறந்து வழிபட்டு தலங்களுக்கு வழிவகுக்கப்பட்டன.ப


புத்தகம்; இமைகள் 2004 

Wednesday, 29 September 2010

அன்பு

உலகமே உன்னை வெறுத்தாலும்                                                                
உன்னை நேசிக்க நான் இருக்கிறேன்
என்னை எங்கும் தேடாதே நான்
உன் இதயத்தில் இருக்கிறேன்
பிரியமுடன் உன் அம்மா.

புன்னகை என்பது எதிரியை கூட
நண்பனாக்கும் ஆனால் கோபம் என்பது
நண்பனை கூட எதிரியாக்கிவிடும் ஆனால்
என்றும் எப்போதும் சிரிப்போம்.

அழகை எதிர்ப்பாக்கும் இதயங்களிடம்
அன்பை காட்டாதே,
உன்னிடம் அன்பு வைக்கும் இதயத்திடம்
அழகை எதிர்ப்பார்க்காதே.

உன் உயிரில்,
உன் உறவில்,
உன் மூக்கில்,
உன் நினைவில்,
உன் அன்பில்,
யார் யாரோ இருக்கலாம்...!
ஆனால் யாரும் இல்லாத போது
உனக்காக நான் இருப்பேன்
உன்மையான நண்பனாக.

Tuesday, 28 September 2010

மொழி பெயர்ப்பாளர் அண்ணா

படித்ததில் பிடித்தது

அண்ணாவின் சாதனை

சுமார் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் திருச்சி தேவர் மன்றத்தில் நீதிக்கட்சியின் மாநாட்டை முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் வர்கள் முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். மாநாட்டின் தலைவர் சர்.ஏ. இராமசாமி முதலியார் அந்தக் காலத்தில் மேடையில் தமிழில் பேசுவது நாகரிகக் குறைவு என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அரசியல் கூட்டங்களில் தமிழில் பேச வேண்டிய கட்டாயம் எழுந்த போது பேசிப் பழக வாய்ப்பில்லா நிலை இருந்தது . அப்போது இராமசாமி முதலியாரின் ஆங்கிலப் பேச்சை மொழி பெயர்க்க ஒருவர் தேவை என அமைப்பாளரிடம் கூறினார். விசுவநாதமோ வந்திருந்த வழக்குரைஞர்கள் பலரையும் கேட்ட போது அவர்கள் மறுத்துவிட்டனர் . விசுவநாதன் வேதனைப்பட்டார். தலைவரோ, 'மொழி பெயர்ப்பாளர் இன்னும் கிடைக்கவில்லையா?' என மேலும் மேலும் கேட்கத் தொடங்கினார். அந்த நிலைமையில் அவர் சங்கடமறிந்த அன்பர் திரூ. விசுவநாதன் அவர்களிடம் சென்று ''இவர் மொழி பெயர்ப்பாளர். கல்லூரி மாணவர். எம்.ஏ.  படித்தவர்'' என்று பரிந்துரைத்தார். இதைக் கேட்ட விசுவநாதம் சினங் கொண்டார். இது அவரைக் கிண்டல் செய்வதாகப் கருதினார். ''ஒரு பெருந்தலைவரின் பேச்சை ஒரு மாணவரைக் கொண்டு மொழி பெயர்ப்பதை விட ஆங்கிலத்திலேயே இருந்து விட்டால் நன்றாக இருக்கும்'' என விட்டு விட்டார். ஆனால், தலைவர் விடுவதாக இல்லை.'' எங்கே மொழி பெயர்க்க ஆள் கிடைத்து விட்டாரா?'' என்று கேட்டார். விசுவநாதமோ வேறு வழியின்றி அதே மாணவரான சி.என். அண்ணாதுரையை அணுகி அவர் பெயர், ஊர், படிப்பு, வேலை முதலிய விவரங்களைக் கேட்டறிந்த பின் ''நன்றாக மொழிபெயர்ப்பாயா'' என்று கேட்டார். அண்ணாவோ அடக்கமாக ''ஏதோ கொஞ்சம் தெரியும்'' என்று கூறினார். பின்னர் மொழி பெயர்ப்பு வரிக்கு வரி மிகவும் சிறப்பாக நடந்தது. கி. ஆ. பெ. விசுவநாதமுக்கு மகிழ்ச்சி எல்லை கொள்ளவில்லை. தான் ஏதோ சாதனை புரிந்தது போல் மொழி பெயர்க்க மறுத்த வழக்குரைஞர்களிடம் சென்று ''நீங்கள் மறுத்திர்களே! எப்படி மொழி பெயர்ப்பு?'' என்று கேட்டார். அவர்களோ, ''நாங்கள் மறுத்ததால் தான் ஒரு நல்ல மொழி பெயர்ப்பாளர் கிடைத்தார்'' என்று கூறினார். தலைமையேற்ற சர். ஏ. ராமசாமி முதலியாரும் , மொழி பெயர்ப்பு அருமை என்று மகிழ்ச்சியோடு கூறினார். 

 .--எம்ப்ளாய்மெண்ட் சர்வீஸ் செப் 29-அக் 5, 2010